Monday, 21 December 2015

சந்தன மரம் வளர்ப்பு சம்பந்தமான கேள்விகள்.

தனியார் நில உரிமையாளர்கள் சந்தன மரம் வளர்க்கலாமா?
வளர்க்கலாம். The Tamil Nadu Sandalwood Trees on Patta Land Rules, 2008 (GO. MS. No.140, Environment and Forests (FR4), 27 November 2008) படி தனிநபர்கள், சந்தன மரங்களை வளர்க்க அரசு அனுமதி அளித்துள்ளது.

சந்தன மரம் அனைத்து மண்களிலும் வளருமா?
சந்தன மரங்கள் PH மதிப்பு 6 - 8 உள்ள தரிசு, செம்மண், உலர்ந்த மற்றும் பல்வேறு மண்களிலும் வரட்சியிலும் பசுமையாக வளரும்.

சந்தன மரத்தின் வருவாய் பகிர்வு முறை மற்றும் வருவாய் பற்றி கூறவும்?
அரசாங்கம் ஏலத்தொகையில் 20% நிர்வாக கட்டணமாக எடுத்து கொண்டது போக மீதமுள்ள 80% வருவாயில் 40% நிறுவனத்திருக்கும் 40% நில உரிமையாளருக்கும் வழங்கப்படும்.



சந்தன மரம் வளர்ப்பு காலம் எவ்வளவு?
15 ஆண்டுகளில் வணிக ரீதியாக விற்பனைக்கு தயாராகிவிடும். அரசாங்க அனுமதியுடன் மரம் வெட்டி விற்றபின் நிலம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும்.

சந்தன மரத்திற்கு காப்பீடு செய்யப்படுமா?
ஆம். சந்தன மரக்கன்றுகளுக்கு உரியகாலத்தில் காப்பீடு வசதி செய்யப்படும்.
சந்தன மரம் வளர்க்க என்ன செய்ய வேண்டும்?

தங்கள் இடத்தில் சந்தன மரக் கன்றுகள் வளர்க்க நிறுவனத்திற்கு 15 வருடங்களுக்கு வளர்க்கும் உரிமையை வழங்க வேண்டும்.
சந்தன மரம் வளர்ப்பு காலத்தில் நில உரிமையாளர் நிலத்தை பார்வையிடலாமா?

நிறுவனத்தின் அனுமதியுடன் சென்று பார்க்கலாம்.
சந்தன மர வளர்ப்பு காலத்தில் நில உரிமையாளர் தனது இடத்தை விற்கலாமா?
விற்கலாம். புதிய உரிமையாளர் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை தொடர வேண்டும். அதற்காக ஏற்படும் செலவினை புதிய உரிமையாளர் ஏற்க வேண்டும்.

Contact:
EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar ,
Chennai-600040, Tamilnadu.
044 45058348 | 42612288,
7358598899,7358596677
info@edsfarms.com
www.edsfarms.com

No comments:

Post a Comment